அனுராதபுர கால கட்டடங்கள்
கி.மு 4ம் நூற்றாண்டில் ஆரிய விஜயனின் வருகையினைத் தொடர்ந்து இலங்கையினுடைய வரலாறு அறியப்படுகின்றது. மகாவம்சம், தீபவம்சம் , சூளவம்சம் போன்ற இலக்கியங்களில் இவ் வரலாறுகள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன. இலங்கையில் பௌத்த மதத்தின் வருகையைத் தொடர்ந்தே ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட பண்பாடு உருவாக ஆரம்பித்தது. பௌத்தத்தின் வருகையானது இலங்கையினுடைய அரசாட்சி உருவாக்கம், பண்பாட்டு உருவாக்கம், கலைகளின் வளர்ச்சி, மக்களுடைய வாழ்க்கை முறை, சமய ஒழுங்கு முறைகள், என்று பலவற்றை உருவாக்கி இருக்கின்றது. பௌத்தமதம் உருவான இந்தியாவைக் காட்டிலும் அதனுடைய தாக்கம் இலங்கையிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் அனுராதபுர காலத்து நினைவுச் சின்னங்கள் பௌத்த மதம் சார்ந்ததாகவே அதிகம் அடையாளம் காணப்படுகின்றன.
அனுராதபுர காலத்து நினைவுச் சின்னங்கள் இலங்கையின் பல இடங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. கி.மு 377 ஆம் ஆண்டில் ஆரிய மரபினரான பண்டுகாபயனால் உருவாக்கப்பட்டு கி.பி 10ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி வரை நீடித்திருந்தது. கிமு நான்காம் நூற்றாண்டில் தேவநம்பியதீசன் ஆட்சிக்காலத்தில் மஹிந்ததேரர் இலங்கைக்கு வருகை தந்ததுடன் பௌத்த சமயத்திற்கான அஸ்திவாரம் இங்கே இடப்பட்டது. இதனை ராஜகலக் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது. அதனைத் தொடர்ந்து பலர் பௌத்த சமயத்தை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கு வருகை தந்தனர்.
மஹிந்த தேரர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த அனைவரும் வட இந்தியாவில் மௌரிய வம்சத்தைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்ற படியால் அவர்கள் மூலம் கொண்டுவரப்பட்ட பௌத்த மதத்தோடு மௌரியக் கலைகளும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. பிற்பட்ட காலப் பகுதிகளில் ஆந்திர, குப்த, பல்லவ கலை வடிவங்களும் கொண்டுவரப்பட்டன. அந்த வகையிலே தூபிகள், விகாரைகள், குகைக்கோவில்கள், மடங்கள், என்று பல கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவின் பண்டைய விகாரைகளான காஞ்சி வரகுத் என்பவற்றின் அம்சங்களிலேயே இலங்கையின் ஆரம்பகால விகாரைகள் உருவாக்கப்பட்டன.
ஆரம்பகால அனுராதபுரத்தில் இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டடங்களில். தூபராம தாதுகோபம், அபயகிரி விகாரை, ருவான்வெலிசாய, ஜேதவனராமய போன்ற மிகப்பெரிய புகழ்மிக்க விகாரைகள் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இன்றும்கூட கவர்ந்து வருகின்றன. விகாரைகள் மட்டுமல்லாது அக்காலத்து தானசாலைகள், வைத்தியசாலைகள், பிரிவெணாக்கள், சைத்தியம், போதி மனை, சிலைமனை மற்றும் ஆரம்பகால குகைகள், நீர்த்தடாகங்கள், அணைக்கட்டுகள் போன்ற பல கட்டடக் கலை அம்சங்கள் அனுராதபுர இராசதானி காலத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
அனுராதபுர கால குகைக் கோவில்கள்
ஆரம்ப காலங்களில் பௌத்த பிக்குகள் இயற்கையாக அமையப்பெற்ற குகைகளில் தங்கி தம்முடைய சமய நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இயற்கைக் குகைகளில் மழை நீர் உட்புகாத வண்ணம் தூபிகள் அமைக்கப்பட்டது. அனுராதபுர காலத்தில் பல குகைகள் பௌத்த பிக்குகள் வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்ட போதிலும் அவற்றில் தம்புள்ளை, மிஹிந்தலை, ரிதிகல, சிகிரியா போன்ற குகைகள் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. இக்குகைகள் பிற்காலம் வந்த ஆட்சியாளர்களால் மாற்றி அமைக்கப்பட்டு ஓவியங்கள் தீட்டப்பட்டும் சிலைமனைகளாகவும் உருவாக்கப்பட்டன. .
தம்புள்ளை பொற்கோவில்
இலங்கையின் மத்திய மாகாணம் மாத்தளை மாவட்டத்தில் காணப்படுகின்ற ஒரு குடைவரைக் கோயிலாக இது காணப்படுகின்றது. கொழும்பிலிருந்து 148 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது. இலங்கையினுடைய மிகப்பெரிய குகை கோவிலாக அடையாளம் காணப்படுகின்ற தம்புள்ளைக் குகைக் கோவிலானது. சுற்றியுள்ள சமவெளிகளில் மொத்தமாக 160 மீட்டர் உயரம் கொண்ட பாறையில் இது அமைந்துள்ளது. மொத்தமாக 80 அடையாளப்படுத்தப்பட்ட குகைகள் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. இருப்பினும் ஐந்து குகைகளில் மாத்திரமே ஓவியங்களும் சிற்பங்களும் அமையப் பெற்றிருக்கின்றன.
புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய பல சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படுகின்றன. மொத்தமாக 153 புத்த சிலைகள் 3 இலங்கை அரசர்களுடைய சிலைகள் பிற்காலத்தில் விஷ்ணு மற்றும் பிள்ளையார் சிலைகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. இங்கே அனுராதபுர கால பௌத்த பிக்குகள் வாழ்ந்தமை குறிப்பிடப்படுகின்றது. அத்தோடு 2700 ஆண்டுகளுக்கு முன்னதான மனித படிமங்கள் காணப்படும் இபன்கட்டுவ பிரதேசமும் இதன் அருகிலேயே காணப்படுகின்றது. இதனுடைய சிறப்புத் தன்மை காரணமாக 1991 ல் UNESCO உலக மரபுரிமைத் தளமாக பிரகடனப்படுத்தப்பட்டது இன்றைக்கு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இது காணப்படுகின்றது.
மிகிந்தலை குடைவரைக் கோயில்
![]() |
| https://www.lanka-excursions-holidays.com/mihintale-sightseeing.html |
முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேவநம்பியதீசனும் மஹிந்ததேரரும் சந்தித்த இடமாக பௌத்த மக்களால் இது நம்பப்படுகின்றது. பௌத்த சமயத்தவர்களின் மிக முக்கியமான யாத்திரைத் தலமாகவும் காணப்படுகின்றது.
சிகிரியா குகைகள்
இலங்கையின் முதன்மையான சுற்றுலா மையமாக இது கணிக்கப்படுகின்றது. உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகின்ற சிகிரியாக் குன்று. கிபி ஆறாம் நூற்றாண்டில் தாதுசேனன மன்னனின் இரண்டாவது மகனான காசியப்பனால் உருவாக்கப்பட்ட மிகப் பாதுகாப்பான நகரமாகும். 1144 அடி உயரம் கொண்ட குன்றின்மீது கோட்டை கட்டி அங்கே நீர்நிலைகள், பூங்காக்கள்,அகழிகள் என்பவற்றை உருவாக்கி அதிசயிக்கத்தக்க கட்டுமானங்களோடு இந்த நகரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே காணப்படும் குகைகளில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன அவற்றில் ஒருசில மாத்திரமே தற்பொழுது எஞ்சியுள்ளன. குன்றின் அடிப் பாகத்திலும். இடைப்பகுதியிலும் குகைகள் காணப்படுகின்றன. இங்கே காணப்படும் குகைகளில். ஆரம்ப கால பௌத்த பிக்குகள் வசித்தமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
விகாரைகளோடு இணைந்தும் அவற்றை அண்மித்தும் பல குகைகள் காணப்படுகின்றன. அளுவிகாரை பாறை கோவில், அஸ்கிரிய ராஜ மகாவிகாரை குகைக்கோவில், முல்கிரிகல ராஜமகா விகாரை,நிக்கசல அறன்யசேனாசனய போன்ற இடங்களில் காணப்படுகின்ற குகைக் கோவில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
அனுராதபுர கால தூபிகள்/தாதுகோபங்கள்
தூபிகள் சேத்திய,சாய என்றும் அழைக்கப்படுகின்றன. தாதுகோபுரம் எனப்படுவது ஒரு விகாரையின் மிகப் புனிதமான பகுதியாகும்.. புத்தரின் சரீரப்பகுதிகள் அல்லது அவரால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்பவற்றை வைத்து கட்டப்பட்ட வழிபாட்டு நினைவுச்சின்னமாகக் காணப்படுகிறது. இக்கட்டுமானம் மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டது. அவை அடித்தளம், அண்டம், தூபி என்பனவாகும். அடித்தளத்தின் மேல் அரைக்கோள வடிவில் அமைக்கப்படுவது அண்டம் எனப்படுகிறது. இது மணி வடிவம், பானை வடிவம், குமிழி வடிவம், தாமரை வடிவம், நெற்குவியல் வடிவம், நெல்லிக்காய் வடிவம் என்று பல்வேறு வகைகளில் அமைக்கப்படும். அண்டத்தின் மேலுள்ள பகுதி தூபி எனப்படுகின்றது.
பௌத்த தூபிகளில் மிகப் பழமையானதாக அசோகச் சக்கரவத்தியினால் அமைக்கப்பட்ட காஞ்சிதூபி கிறிஸ்துவுக்கு முன் நான்காம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டே இலங்கையிலும் தாதுகோபங்கள் கட்டப்பட்டன. இலங்கையில் பௌத்த மதத்தின் வருகையின் பின்னர் மன்னன் தேவநம்பியதீசனால் தூபராமதூபி அமைக்கப்பட்டது. இதுவே இலங்கையின் மிகப் பழமையான தூபியாகக் காணப்படுகிறது. பின்னர் பல தூபிகள் பல்வேறு மன்னர்களாலும் அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைந்த தூபிகளில் மிகப்பெரியதாக ஜேதவனராமய காணப்படுகிறது. .
ருவான்வெலிசாய
![]() |
| twitter.com |
தூபராம தூபி
இது இலங்கையில் முதன் முதலில் அமைக்கப்பட்ட தூபியாகக் காணப்படுகிறது. மன்னன் தேவநம்பிய தீசனால் அமைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் மகாமேகவனப் பூங்காவின் மத்தியில் காணப்படுகின்ற ஒரு முக்கிய கட்டுமானமாகவும் தொல்லியல் மையமாகவும் காணப்படுகின்றது. தேவநம்பியதீசனால் கட்டப்பட்டாலும் கால ஓட்டத்தில் பல பாதிப்புகளை அடைந்து முற்றுமுழுதாக சிதைவடைந்து இரண்டாம் மகிந்தன் காலத்தில் இதனை முதன் முதலாக மீள்கட்டுமானம் செய்வித்தான் பின்னர் 1842 ஆம் ஆண்டு தற்போது இருக்கின்ற கட்டுமானம் உருவாக்கப்பட்டது.
அபயகிரி விகாரை
![]() |
| wikipedia |
இதனுடைய கட்டட நுட்பமானது அக்காலத்து சமூக நிலைப்பாட்டின் வெளிப்பாட்டை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. அக்காலகட்டத்தில் இந்து சமயம் சார்ந்த கலை பண்பாடு இவ்விகாரையில் தாக்கம் செலுத்தி இருக்கின்றமை காணமுடிகின்றது. இதனுடைய நுழைவாயில் கட்டுமானமானது ஒரு பாதுகாவலர் தெய்வத்தின் பாதுகாப்பின் கீழ் அமையுமாறு கட்டப்பட்டுள்ளது இங்கு அமைக்கப்பட்டுள்ள காவற் கணங்களும் இந்து பண்பாட்டினைத் தழுவியதாகக் காணப்படுகின்றது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட காவற் கற்களில் இவ்விகாரையில் காணப்படுபவை மிகச்சிறப்பானதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜேதவனராமய
![]() |
| wikipedia.com |
லோவமகாபாய
![]() |
| reddit.com |
ரத்ன பிரசாத
இதுவும் அனுராதபுர கால கட்டத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மடம் ஆகும். அழகாகச் செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட கட்டுமானங்களில் உபோசாதாவீடு (தீட்டுப்பட்ட மனதை சுத்தம் ஆக்குவதற்கான இடம்) என்று குறிப்பிடப்படுகின்றது கிபி 192 தொடக்கம் 194 ஆம் ஆண்டில் மன்னன் கனிஸ்டதீசனால் கட்டப்பட்டது. முதலில் கட்டப்பட்ட கட்டிடமானது ஏழு மாடிகளைக் கொண்ட கட்டிடம் என்று குறிப்பிடப்படுகின்றது. வாயிலில் தூண்கள் அழகிய கற்கள் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை போன்றன இங்கே காணப்பட்டன.
இப்போது அதிக அளவில் சேதமடைந்து இருக்கின்ற போதிலும் அவற்றில் சில பண்டைய ஒற்றைத் தூண்கள் மற்றும் நுழைவாயிலில் காணப்படும் கற்கள் புராண டிராகன் உருவம் கொண்ட உருவம் ஒரு வகைக் குள்ள மனிதர்களின் உருவம் போன்ற அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்கின்றன. இங்கே காணப்படும் காவலர்கள் சிற்பம் அரிதானதாகக் கருதப்படுகின்றது. இடிபாடுகளில் காணப்படும் சிற்பங்கள் அதிசிறந்த நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் அழிபாடுகளைக் கொண்டு இக்கட்டடம் மிகப் பிரம்மாண்டமானதாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மகாபாலி பிச்சை மண்டபம்
![]() |
| www.attractionsinsrilanka.com |
குட்டம் பொக்குண இரட்டைப் பொய்கை
![]() |
| lakpura.com |
அனுராதபுர கால பண்டைய மருத்துவமனை
இது மிகிந்தலையில் காணப்படும் பண்டைய மருத்துவ நிலையமாகக் குறிப்பிடப்படுகின்றது. ஐந்தாம் நூற்றாண்டில் விஜயம் செய்த மகாயான பாதிரியாரான fa-hsinen இங்கே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிக்குகள் இருந்ததாகத் தெரிவிக்கின்றார். இவற்றினுடைய அழிபாடுகள் பிற்கால அனுராதபுரத்தில் இரண்டாம் சேன மன்னனால் உருவாக்கப்பட்டவை. ஆனால் இதற்கு முன்னரே பௌத்தர்களுக்காக மிகிந்தலையில் மருத்துவமனை அமைப்பு காணப்படுவதை அறிய முடிகின்றது.
மருத்துவமனையில் உட்பகுதி புத்தர் சன்னதியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதனைச்சுற்றி நோயாளிகளுக்கான அறைகள் காணப்படுகின்றன ஒவ்வொரு அறையிலும் சந்நிதியை எதிர்கொண்டு சுமார் 10*10 அடி அளவு கொண்ட முலைகளின் பெரிய அறைகள் உள்ளன. வடகிழக்கு மற்றும் கிழக்கு அறைகளில் மருத்துவத் தொட்டி காணப்படுகின்றது தெற்கு பகுதியில் மன்றம் ஒன்று காணப்படுகிறது அதற்கூடாக நீர் மற்றும் நீராவி குளியல், அரைக்கும் கல் ஒரு மருந்தகம் என்பன இருந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.
அனுராதபுர கால பாலங்கள்
![]() |
| destimap.com |
சந்திரவட்டக்கல்
![]() |
| www.steuartholidays.com |
இந்த சந்திர வட்டக்கல்லில் காணப்படுகின்ற வெளிப்புற வட்டம் நெருப்பு அலைகளைக் குறிக்கின்றது. அதற்கு அடுத்ததாக யானைகள், குதிரைகள், சிங்கம், மற்றும் யாளி உருவங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் காணப்படுகிறது. இப்படி 13 விலங்குகளின் ஊர்வலத்தை மீண்டும் மீண்டும் உருவாக்குவதாக இந்த அமைப்பு காணப்படுகின்றது. இப்படிப்பட்ட விசித்திரமான கலை வெளிப்பாடுகளைக் கொண்ட சந்திரவட்டக்கல் அனுராதபுர கால கட்டங்களில் பல கட்டடங்களில் பயன்படுத்தப்பட்டு இருப்பதன் காரணமாக இங்கே வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இது குறிப்பிடப்படுகிறது.
























