தமிழ் பண்பாட்டில் மடங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அந்த வகையில் சிறப்பர் மடம் இலங்கையில் தனிச்சிறப்புடையது. யாழ்பாணம் வடகரையில் அமைந்திருக்கும் கீரிமலையின் தொன்மையினை எடுத்தியம்பும் நகுலேஸ்வர ஆலயத்தின் வடக்கில் சைவப்பண்பாட்டின் கலை அம்சங்களை வெளிப்படுத்தி யாழ்ப்பாணத்து மட கட்டிடக்கலையின் சிறந்த வெளிப்பாடாகவும் ஆன்மீக தேடலுடையோரின் சேவை மையமாகவும் இம்மடம் காணப்படுகின்றது. 18 ம் நூற்றாண்டுகளில் நகுலேஸ்வர தண்ணீர் பந்தல் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்படட இம்மடமானது தற்போதைய கலகட்டத்தில் இலங்கையின் மிகப்பெரியதும் தொன்மை வாய்ந்ததுமாகத் திகழ்கிறது. சைவ சமய யாத்திரிகர்கள், உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் சான்றோர்களிற்கு இம்மடம் ஆற்றிய பணிகள் ஏராளம் .
 |
மடத்தின் பிரதான நுழைவாயில்
|
வருடத்தின் எல்லா நாட்களிலும் 24 மணிநேரமும் தாகம் என வருவோரிற்கு மோர் வழங்குதல். நாடி வருவோரிற்கு நாளாந்தம் அன்னதானம் வழங்குதல். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (சிங்கப்பூர் மலேசியா போன்ற ) யாத்திரீகர்களுக்கு இலவசமாக தங்குமிடம் வழங்குதல். கந்தபுராண படலம் மற்றும் சமய தினங்களை சுற்றத்தில் உள்ளவர்களுடன் இணைந்து அனுஸ்டித்தல். என இம்மடத்தின் பணிகள் அன்றைய காலகட்டத்தின் தேவைகளுக்கும் மக்களின் வாள்வியலுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.
யாழ்ப்பாணத்தின் பரம்பரியத்துடன் கூடிய ஒரு கடடடக்கலை அம்சத்தை பார்வையிட விரும்புவோர் இங்கு வந்து பார்வையிட முடியும். வடக்கு நோக்கி அமைந்துள்ள இதன் வாயில் பகுதி மிக நுட்பமான பண்டைய கட்டடக்கலை அம்சத்தில் அமைந்த நுழைவாயிலைக் கொண்டது.சிற்பங்கள் அலங்கார வேலைப்பாடுகள்,இயற்க்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி தீட்டப்பட்ட வர்ணங்களும் அங்கங்கே தென்படுவதைக் காணலாம். வேறு இடங்களில் காண முடியாத யாளி உருவம் இங்கே காணப்படுகிறது. இந்த வாயில் கோபுரம் சிதைவுகளிட்கு உள்ளாகி இருந்தாலும் இன்று வரை அதன் கம்பீரம் மற்றும் அழகு என்பன மாறாமல் இருக்கின்றது.
நுழை வாயிலிட்கும் கட்டடத்திட்க்கும் இடையில் பிரதான நடை பாதை காணப்படுகின்றது. ட வடிவத்தில் இரண்டு புறமும் இது செல்கிறது. தற்சமயம் இதன் இரண்டு பக்க திண்ணைகளே காணக்கூடியதாக உள்ளன. அவற்றில் இருந்து வட்ட வடிவ தூண்கள் அமைக்கப்பட்டு மேல் கூரை அமைந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. செங்ன்கற்களை மாத்திரம் பயன்படுத்தி இந்த தங்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. நுழை வாயிலின்வலது புறமாக தண்ணீர் மண்டபம் காணப்படுகிறது . இதில் இரண்டு அறைகள் திண்ணை தூண்களின் மேல் சின்பங்கள் போன்றன பழமையான பாரம்பரியத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மடத்தின் பிரதான கட்டடம் நாச்சார வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. முற்றம் நடுப்பகுதியில் காணப்படுகிறது.முற்றத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இரண்டு புறமும் அறைகள் காணப்படுகின்றன தென் மேற்கு மூலையில் விநாயகர் வழிபட்டு அறை காணப்படுகின்றது. சிலையானது மிகவும் பழமை வாய்ந்ததாகும் பார்ப்பதடற்கு மிக நேர்தியானதும் கம்பீரமானதுமான தோற்றம் கொண்டது.
கடடடத்தின் கிழக்கு பக்கமாக சமைக்கும் பகுதி காட்டப்படுகிறது. தெக்கு புறமாக ஒரு முற்றமும் அதனை அடுத்து விருந்தினர் தங்குவதற்கான அறைகளும் காணப்படுகின்றன. கட்டடம் மொத்தமாக சுண்ணாம்பு மற்றும் செங்கல் போன்றவற்றை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் பொழியப்படட கருஙகற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் யாழ்ப்பாண பாரம்பரியத்தில் தனித்துவமான ஆவுரஞ்சி கல் மற்றும் நீர் தொட்ட்டி போன்ற காணப்படுகின்றன. இங்கே பார்வையிடும்போது யாழ்பாணப்பண்பாட்டின் பல்வேறு அம்சங்களை காண முடியும். ஒரு சிறந்த சுற்றுலா மையமாகத் திகள்வதற்கு எல்லாவிதமான தகுதிகளைக்கொண்டு காணப்படுகின்ற சிராப்பர் மடம் இன்று கவனிப்பார் அற்று விடப்பட்டுள்ளமை காவலைக்குரிய விடயமாகும் .
 |
| மோர் வழங்கும் இடம் |
 |
| சுமை தாங்கி |
 |
| தண்ணீர் தொட்டி |
 |
| ஆவுரஞ்சி |
 |
வாயில் படிக்கல்
|
No comments:
Post a Comment