Saturday, 3 April 2021

ஜமுனா ஏரி

 

 

 யாழ்ப்பாணம் தனி  அரசாகத் திகழ்ந்த   கலகட்டங்களில் அமைக்கப்பட்ட பல நிர்மாணங்களில் ஒன்றாக ஜமுனா எரி குறிப்பிடப்படுகின்றது . பருத்தித்துறை வீதியில் சட்டநாததர் கோவிலில் இருந்து மிகக்குறுகிய தொலைவில் யாழ் வலயக்கல்வி அலுவலகத்தின் பின்புறமாக சிதைவடைந்த நிலையில் காணப்படும் இந்த ஏரி யாழ்ப்பாண தமிழ் அரசாட்சியின் பெருமையை எடுத்துரைக்கும் சான்றாகக் காணப்படுகின்றது. 

 

https://www.visittamileelam.com/Jamuna-Aeri.php


     இந்த ஏரி பற்றி  பலதரப்படடவர்களும் கருத்துக்களை முன்வைக்கின்றனர் ஆனாலும் இதுவரை ஆதாரபூர்வமான தகவல்கள் முன்வைக்கப்படவில்லை.  கி.பி 14ம் நூற்றாண்டே வட இலங்கையில் யாழ்ப்பாண அரசு நிறுவப்பட்ட கலப்பகுதியாகும்.  யாழ்ப்பாண அரசு பற்றி எடுத்துரைக்கும் யாழ்ப்பாணவைபவமாலை, கைலாயமாலை வையாபாடல் போன்ற நூல்களில் இந்த ஏரி  பற்றிய தகவல்கள் தெளிவாகக்  குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக இதன்  தோற்றம் அமைப்பு முறை என்பன பற்றி பலதரப்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வேரி பற்றிய  தெளிவான தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு அக்கால அரசியல் நிலை பற்றி முதலில்  விளங்கிக்கொள்ளவேண்டும்.

 

        14 ம் நூற்றாண்டு தென்னிந்தியாவில் நிலவி வந்த பாண்டியரின் ஆதிக்கம் வடக்கில் இருந்து வந்த முஸ்லிம்களின் படையெடுப்பால் வீழ்ச்சி கண்டது. பண்டிய மன்னன் குலசேகர பாண்டியன்  மகனான சுந்தர  பாண்டியன் தந்தையைக்  கொன்று அரசைக்  கைப்பற்றிக்கொண்டான். இதன் காரணமாக அவன் சகோதரன் வீர பாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனிற்கும் பிணக்கு ஏற்பட்டது . இதனால்  வீர பாண்டியன் சுல்தான்களின் உதவியை நாடினான். இதன் காரணமாக சுல்தான்களின் ஆதிக்கம் மதுரையில்  ஏட்பட்டு இறுதியில் பாண்டிய  தேசம் சுல்தான்களின் வசமானது. இதுவே யாழ்ப்பாண அரசு உருவாவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

twitter.com

     முஸ்லிம்களின் ஆதிக்கத்தினால் பாண்டியப்பிரதானிகள் இலங்கைக்கு வந்து அரியச்சக்கரவர்திகள் எனும் பெயரில் ஆட்சியை நிறுவினர். இதனை யாழ்ப்பாணவைபவமாலை

  நாலு மதிலும் எழுப்பி 

 (கோட்டை மதில் )

 மாடமளிகையும் கூடகோபுரங்களும் 

(பாரிய மளிகை )

 பூங்காவையும் பூங்கா நடுவே ஸ்னான மண்டபமும் 

(ஜமுனா ஏரியைக்  குறிக்கின்றது )

மூப்புடைக்கூபம் உண்டாக்கி 

(இதன் பகர வடிவம் )

அக்கோபத்திலே ஜமுனா நதித்தீர்த்தமும் 

அழைப்பித்துக்  கலப்பித்தான் 

    என்றவாறு குறிப்பிடுகின்றார். சிங்கையாரியன்  என்கின்ற மன்னன் இவற்றை அமைப்பித்து பலம் வாய்ந்த அரசாக யாழ்ப்பாண ராசதானியை உருவாக்கினான் என்று ஆசிரியர் விளக்கிக்கூறுகின்றார். தேசசஞ்சரியான இபன்பதுதா இலங்கைக்கு வருகைதந்தபோது இங்கே ஒரு பலம் வாய்ந்த அரசு செல்வச்செழிப்புடன் விளங்கியதாக அவரது குறிப்புக்கள் தெரிவிக்கின்றன .

    இஸ்லாமியரின் ஆதிக்கத்தை ஒழிக்க சிதறிக்கிடந்த பாண்டியச் சிற்றரசர்கள் ஒன்றிணைந்து இஸ்லாமியரை வென்று விஜயநகரப்பேரரசை உருவாக்கினர். இதன் பின்னர் யாழ்ப்பாண ராஜதானி விஜயநகரப்பேரரசின் மேலாண்மையில் இருந்தது. அரியச்சக்கரவர்திகளின் ஆதிக்கம் இங்கே காணப்படடாலும்  அது எல்லா காலப்பகுதிகளிலும் நிலையானதாக அல்லாது பல்வேறு தளர்வுகளும் ஏற்பட்டன.  இவ்வாறான ஒரு அரசியல் பின்புலத்தில்தான்  ஜமுனா ஏரியின் உருவாக்கமும் நிகழ்ந்ததாகக்  குறிப்பிடப்படுகின்றது.

பெயர்  

    இந்த ஏரிக்கு ஜமுனா என்ற பெயர் சங்கிலிய மன்னனின் மனைவியான ஜமுனா என்பவர் இங்கு  குளித்ததன் காரணமாக உருவானதாக சில ஊடகங்கள் கருத்துத்  தெரிவிக்கின்றன. அனல் இக்கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை. கரணம் இதற்கு ஜமுனா நதி தீர்த்தம் கலக்கப்பட்ட்தால் இப்பெயர் உண்டானதாக யாழ்ப்பாண வைபவமலை தெளிவாகக்கூறுகின்றது. அது மட்டுமல்லாமல் யாழ்ப்பாண ராசதானியின் ஆரம்ப கால மன்னனால் கட்டப்பட்ட இவ்வேரிக்கு எப்படி அதன் இறுதிக்கால மன்னன் ஒருவனின் மனைவியின் பெயர் சூட்டப்டப்பட  முடியும் என்கின்ற வாதங்கள் காணப்படுகின்றன .

    அடுத்ததாக ஜமுனா நதியின் தீர்த்தம் கொண்டு வந்து  கலக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார் மயில்வாகனப்புலவர். அனாலும் அக்காலம் விஜய நகரப்பேரரசின் எதிரிகளான முஸ்லிம்களின் ஆட்சிப்பரப்பான வட இந்தியாவில் இருந்த ஒரு நதியின் நீர்  எப்படி இங்கே கொண்டுவரப்பட்டிருக்க முடியும். இது காலப்போக்கில் முஸ்லிம் களிட்கும் தென்னிந்தித்ய அரசுக்கும் அல்லது யாழ்ப்பாண அரசிற்கும் இடையில் ஏட்பட்ட இணக்கப்பாட்டினைக் குறிக்கின்றது .

நோக்கம் 

    இந்த ஏரியின் கட்டுமானம் பற்றி  ஆரம்பகாலம் தொட்டு இருந்துவரும் கூற்று இதனை அக்கால தோட்டம்  (இது பிற்க்கலாம் சங்கிலியன் தோப்பு எனப்பட்டிருக்கலாம்) ஒன்றில் அமைக்கப்பட நீர் நிலை என்பதாகும். இது அரச மங்கையர் நீராடும் அந்தப்புரத்து குளியல் இடம் எனக் கருத்துண்டு. அனால் மயில்வாகனப்புலவர் இதனைப்  பொத்தம் பொதுவாக ஸ்னான மண்டபம் என்றே  குறிப்பிடுகின்றார். இதனை சுற்றி சிறிய அளவிலான கட்டடங்கள் இருந்தமைக்கான  சான்றுகள் உள்ளன. 

     மேலும் இந்த ஏரி, பூங்கா  மற்றும் ஏனைய  அரச நிர்வாகப் பகுதிகளிற்கு நீரினைக் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும் என்கின்ற கருத்துக்களும் உண்டு. குறிப்பாக மந்திரி மனைக்கு இங்கிருந்தொரு சுரங்கம் காணப்படுவதாக கூறப்படுகின்றது . இதனுடைய ஆழம் , அமைப்பு முறை என்பவற்றை நோக்கும்போது இக்கருத்து புலனாகின்றது. மேலும் பிரித்தானியர் காலத்தில் இங்கிருந்து வேறு சில இடங்களிற்கு நீர் கொண்டு செல்லப்பட்டதாக பிரித்தானியக் குறிப்புக்கள் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல் அண்மைக்காலம் வரைக்கும் அயல்ப்பகுதிகளில் வாழும் மக்கள் இங்கிருந்து நீரைப்  பெற்றுக்கொண்டனர். 

கட்டுமானம்  

     ஜமுனா ஏரி முழுவதுமாக முருகைக்கற்கள் மற்றும் சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்பகுதியில் சுற்றிவர  2/3 ஆடி  அகலம் கொண்ட செங்கற்களாலான சுவர் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. பகர வடிவிலான இதன் தோற்றத்தில் பிரதான பகுதி வடக்கு நோக்கியும் மற்றைய  பகுதிகள் கிழக்குத் தெற்காகவும் காணப்படுகின்றன. இதற்கான வாயில் மேட்குப்பகுதியில் அமையப் பெற்றிருக்கின்றமைக்கான சான்றுகள் உள்ளன. நடுப்பகுதியில் உயர்ந்த ஒரு கட்டுமானம் இருந்தமைக்கான சிதைவுகள் காணப்படுகின்றன. இதன் மேற்குப்புறமாக படிக்கட்டு ஒன்று உள்ளது.

https://amazinglanka.com/wp/yamuna-eri/

சிலைகழும் ஜமுனா எரியும்  

    இங்கே முறையான அகழ்வாய்வுகள் மேட்கொள்ளப்படாத போதிலும் 1992 இல் இங்கே மேற்கொண்ட ஆய்வில் மரத்தாலான அம்மன் சிலை ஒண்று கிடைத்தது. இதன்மூலம்  அக்கால மன்னர்கள் தமது சொத்துக்களை இவ்வேரியில் போட்டுவிட்டு ஓடியதாகக் குறிப்பிடப்படுகின்றது. அனாலும் இக்கருத்து தொடர்பாக சரியான விளக்கம் இல்லை. போர்த்துக்கேயர் காலம் அவர்கள் இந்து ஆலயங்கள் பலவற்றை அழித்தபோது ஆலய சிற்பங்கள் பலவற்றை இவ்வாறான இடங்களில் போட்டு மறைத்தனர் இதற்குச் சான்றாக கைலாசப்பிள்ளையார் ஆலயத்தின் கேணியில் கிடைக்கப்பெற்ற பல சிலைகள் அமைகின்றன. இது போலவே ஜமுனா ஏரிக்குள்ளும் சிலைகள் வந்திருக்க வாய்ப்புண்டு எனலாம்.


 


உசாத்துணைகள் 

யாழ்ப்பாண வைபவமாலை 

முத்துத்தம்பிப் பிள்ளை . ஆ . , 1933,யாழ்ப்பாணச்சரித்திரம் , நாவலர் பதிப்பகம் , யாழ்ப்பணம்.


 

 

 


 

 

 

 

 

4 comments:

அனுராதபுர கால கட்டடங்கள்

அனுராதபுர கால கட்டடங்கள் கி.மு 4ம் நூற்றாண்டில் ஆரிய விஜயனின் வருகையினைத் தொடர்ந்து இலங்கையினுடைய வரலாறு அறியப்படுகின்றது. மகாவம்சம், தீபவம்...